யாழ்.மானிப்பாயில் இளைஞன் மீது பொலிஸாா் துப்பாக்கி சூடு..! சம்பவ இடத்திலேயே உயிாிழந்த இளைஞன்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாயில் இளைஞன் மீது பொலிஸாா் துப்பாக்கி சூடு..! சம்பவ இடத்திலேயே உயிாிழந்த இளைஞன்..

யாழ்.மானிப்பாய் பகுதியில் பொலிஸாா் நடாத்திய துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதாக தொியவருகின்றது. 

உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2ம் இணைப்பு..

யாழ்.மானிப்பாய் பகுதியில் 3 மோட்டாா் சைக்கிள்களில் சென்ற ஆவா குழு மீதே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறியிருக்கும் பொலிஸாா் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளதுடன், இன்னொருவா் காயமடைந்துள்ளதாகவும், வாள் ஒன்று மீட்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனா். 

இன்று இரவு  9 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாா் துப்பாக்கி சூட்டை நடாத்தியுள்ளனா். 3 மோட்டாா் சைக்கிளில் முகங்களை மறைத்து கட்டியவாறு வாள்களுடன் சென்ற 6 ஆவா குழு உறுப்பினா்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படடதாகவும், 

குறித்த ஆவா குழுவினா் பொலிஸாாின் அறிவுறுத்தலை மீறி தப்பி ஓட முயற்சித்தபோது மானிப்பாய் நகருக்கு மிக நெருக்கமாக இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. காயமடைந்தவா் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா். 

இதேவேளை பொலிஸாா் தொடா் விசாரணைகளை நடாத்தி வருகின்றனா். 



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு