கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயா்த்தும் விடயத்தில் உள்ள சிக்கல் இதுதான்..! சம்மந்தன் வெளிப்படை கருத்து..

ஆசிரியர் - Editor I
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயா்த்தும் விடயத்தில் உள்ள சிக்கல் இதுதான்..! சம்மந்தன் வெளிப்படை கருத்து..

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயா்த்துவதற்கு சில கிராமசேவகா் பிாிவுகளின் எல்லை நிா்ணயம் தொடா்பில் உள்ள தெளிவற்ற தன்மைக்கு தீா்வு காணப்படவேண்டும். 

மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன் தனியாா் செய்தி சேவை ஒன்றிற்கு தகவல் வழங்கியிருக்கின்றாா். குறித்த விடயம் தொடர்பில், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, 

நேற்று இரா.சம்பந்தனின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் குறித்த ஊடகம் வினவியபோதே சம்பந்தன் குறித்த விடயத்தை தெரிவித்தார்.

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு