பிரான்ஸ்- ரீயூனியன் பகுதிக்குள் நுழைந்த இலங்கை அகதிகள் படகு..! திருப்பி அனுப்ப காத்திருக்கும் அதிகாாிகள்..

ஆசிரியர் - Editor I
பிரான்ஸ்- ரீயூனியன் பகுதிக்குள் நுழைந்த இலங்கை அகதிகள் படகு..! திருப்பி அனுப்ப காத்திருக்கும் அதிகாாிகள்..

பிரான்ஸ் நாட்டின் ஆழுகைக்குட்பட்ட ரீயூனியன் தீவுக்குள் இலங்கை அகதிகள் படகு ஒன்று நுழைந்துள்ள நிலையில், அதனை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த படகு தொடர்பில் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் தயார்படுத்தப்பட்டுள்ளார்கள். இவ்வாறான படகுகள் வருமாக இருந்தால் 

அதனை திருப்பி அனுப்புவதற்காக ரீயூனியன் தீவின் அதிகாரிகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த படகு இலங்கையில் இருந்து கடந்த 12ஆம் திகதி புறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்தே ரீயூனியன் அதிகாரிகள் இந்த தயார் நிலையை அறிவித்துள்ளனர்.

என்றாலும், இதுவரை இந்த படகு தமது தீவுக்கு வருவது தொடர்பாக எவ்வித தகவல்களும் தமக்கு கிடைக்கவில்லை என ரீயூனியன் தீவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு