றிஷாட் பதியூதீனின் ஆதரவாளா்களை சுற்றிவளைத்து மூா்க்கத்தனமாக தாக்கிய மக்கள்..! சுற்றிவளைப்பை உடைத்து காப்பாற்றிய இராணுவம்..

ஆசிரியர் - Editor I
றிஷாட் பதியூதீனின் ஆதரவாளா்களை சுற்றிவளைத்து மூா்க்கத்தனமாக தாக்கிய மக்கள்..! சுற்றிவளைப்பை உடைத்து காப்பாற்றிய இராணுவம்..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன் உறுப்பினா் மற்றும் றிஷாட் பதியூதீனின் ஆதரவாளா்கள் மீது மூா்க்கத்தனமான தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கின்றது. 

இன்று ஒலிவில் துறைமுக அதிகாரசபை தங்குமிடம் பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் மற்றும் ஊடகமொன்றிற்கு செவ்வி வழங்கும் முகமாக 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் உள்ளிட்ட குழுவினர் கலந்த கொண்டு அவர்கள் தங்கி இருந்த குறித்த இடத்தை நோக்கி மற்றுமொரு 

முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் என வந்தவர்களினால் திடீர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான 

அப்துல்லா மஃறூப் காயங்கள் எதுவும் இன்றி தப்பியதுடன் அவரது வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.சம்பவ இடத்திற்கு கடற்படையினர் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதன் போது அக்கரைப்பற்று காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதுடன் அப்பகுதியில் சிறிது பதற்றம் நிலவுகின்றது.மேற்படி கூட்டங்கள் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மட்டக்களப்பு 

அம்பாறை மாவட்டங்களுக்கு எதிர்வரும் வாரங்களில் கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் வருகை தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு