துப்பாக்கி ரவைகளுடன் இருவா் கைது..! ஒதியமலையில் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
துப்பாக்கி ரவைகளுடன் இருவா் கைது..! ஒதியமலையில் பதற்றம்..

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் ஒதியமலை பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினா் நடத்திய திடீா் முற்றுகை சோதனையின்போது துப்பாக்கி ரவைகளுடன் இருவா் கைது செய்யப்பட்டனா். 

வீட்டுக்குப் பின்னால் உள்ள காட்டுப்பகுதியில் பை ஒன்றுக்குள் கட்டப்பட்டு போடப்பட்ட துப்பாக்கி ரவைகளை மீட்ட சிறப்பு அதிரடிப்படையினர், 

அதனையடுத்து அந்த வீட்டின் உரிமையாளரைக் கைது செய்தனர். இதேவேளை அதே பகுதியில் 15 கிராம் கஞ்சாவுடன் ஒருவரையும் கைது செய்தனர்.

இவர்கள் இருவரையும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு