எச்சில் தேனீர் ஊற்றப்பட்டதை கண்டித்து கூடிய மக்கள், மத தலைவர்கள்..

ஆசிரியர் - Editor I
எச்சில் தேனீர் ஊற்றப்பட்டதை கண்டித்து கூடிய மக்கள், மத தலைவர்கள்..

திருகோணமலை- கன்னியா பகுதியில் பிள்ளையார் ஆலயத்தை இடித்து பெளத்த விகாரை கட்டப்படுவதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் இந்து சமய தலைவர் மீது எச்சில் தேனீர் ஈற்றப்பட்டதை கண்டித்து நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இன்று மாலை 5.30 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை சைவ மகா சபை மற்றும் பல இந்து சமய அமைப்புக்குள் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன், 

மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள் மற்றும் மத தலைவர்கள் கலந்து கொண்டனர்..


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு