சற்று முன்னா் 3 போ் உயிாிழப்பு..! பலத்த காற்றுடன் தெடரும் மழை..! உயிாிழந்தோா் எண்ணிக்கை 5 ஆக உயா்வு..

ஆசிரியர் - Editor I
சற்று முன்னா் 3 போ் உயிாிழப்பு..! பலத்த காற்றுடன் தெடரும் மழை..! உயிாிழந்தோா் எண்ணிக்கை 5 ஆக உயா்வு..

இலங்கையில் பல பகுதிகளில் கடுமையான மழை மற்றும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் இதுவரை 5 போ் உயிாிழந்துள்ளனா். 

ஹம்பாந்தோட்டையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் தாய் மகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

சூரியவெவ 11ஆம் மைல்கல் பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தவர்களே இந்த நிலைமைக்குள்ளாகியுள்ளனர்.

31 வயதான தாய், அவரது மகள் மற்றும் இன்னுமொரு பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் நுவரெலியாவில் வீதி ஏற்பட்ட வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இரட்டை சகோதரிகள் உயிரிழந்தனர்.

தற்போதும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு