அம்பாறை- சம்மாந்துறையில் பதற்றம்..! ஆயுதங்களுடன் நடமாடிய நபா்கள் தப்பி ஓட்டம். இராணுவம் குவிப்பு..

ஆசிரியர் - Editor I
அம்பாறை- சம்மாந்துறையில் பதற்றம்..! ஆயுதங்களுடன் நடமாடிய நபா்கள் தப்பி ஓட்டம். இராணுவம் குவிப்பு..

அம்பாறைமாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல்எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் 

ஆயுதம் தாங்கிய இரு நபர்கள் ாி- 56 ரக துப்பாக்கி எடுத்து தன்னைச் சுடமுற்பட்டதாக காணி உரிமையாளர் தெரிவித்ததை  அடுத்து பதற்ற நிலை அப்பகுதியில்ஏற்பட்டது.

குறித்த  காணியில் வெள்ளிக்கிழமை காலை அதன்உரிமையாளர் சென்ற நிலையில் அங்கு  உலாவிக்கொண்டிருந்த நிலையில் இருவர் கையில் துப்பாக்கியுடன் காணப்பட்டுள்ளனர்.

 இதனை தொடர்ந்துகாணி உரிமையாளர் அவர்களை நோக்கி சென்றதுடன் துப்பாக்கி ஏந்தியவர்கள் தன்னை சுடமுயன்று அச்சுறுத்தியதாகவும் 

தான் அதிலிருந்து தப்பியதாகவும் குறிப்பிட்டார். இதனை அடுத்து அருகிலுள்ள இராணுவத்தினரும் அவ்விடம் வந்து விசாரணை மேற்கொண்டதுடன் இவிடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட  ஆயுததாரிகள் தப்பிச் சென்றுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது .

இதனைத்தொடர்ந்து பெருமளவு இராணுவத்தினர் அப்பகுதியில்  குவிக்கப்பட்டுசோதனை குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது எனினும் எந்தவித ஆயுதமும் நபர்களோ  கைது செய்யப்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு