ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு செல்லாமைக்கு காரணம் இதுதான்..! கூறினாா் மாவை. “நக்கிற நாய்க்கி செக்கென்ன சிவலிங்கமென்ன..”

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு செல்லாமைக்கு காரணம் இதுதான்..! கூறினாா் மாவை. “நக்கிற நாய்க்கி செக்கென்ன சிவலிங்கமென்ன..”

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினா்கள் கொழும்பில் இல்லாமையினாலும் வேறு சில காரணங்களாலும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. என நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராசா கூறியுள்ளாா். 

கன்­னியா பிள்­ளையார் கோவில் விவ­காரம் குறித்து ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்தும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­ பினர் ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பில் கலந்­து­கொள்­ள­வில்லை. 

இது குறித்து வின­வி­ய­போதே அவர் இதகை குறிப்­பிட்டார். மேலும் கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக விவ­காரம் குறித்து கோடிஸ்­வரன் எம்.பிக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அவ­ரையும் கலந்­து­கொள்ள வேண்டாம் என கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­யுள்­ளது. 

இது தொடர்பில் இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா குறிப்­பி­டு­ கையில், தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் முக்­கி­ய­மான சில உறுப்­பி­னர்கள் வெளிப் பிர­தே­சங்­களில் உள்ள கார­ணத்­தி­னாலும் வேறு சில முக்­கிய கார­ணங்­க­ளுக்­கா­கவும் 

தாம் கலந்­து­கொள்­ள­வில்லை. இந்த சந்­திப்பு நேற்று இடம்­பெற்­றது. ஆனால் நாம் கலந்­து­கொள்­ள­ வில்லை. தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் மாத்­திரம் ஜனா­தி­ப­தியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்த கோரிக்கை விடுத்­துள்ளோம். 

அனே­க­மாக அடுத்த பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் போது அல்­லது அந்த வாரத்தில் ஏதேனும் ஒரு நாளில் நாம் ஜனா­தி­ப­தியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்த வாய்ப்­புகள் உள்­ளது. அதேபோல் கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக விவ­காரம் குறித்தும் 

அமைச்சர் வஜிர அபே­வர்­தன மற்றும் கூட்­ட­மைப்பின் கோடீஸ்­வரன் எம்.பி ஆகி­யோரை சந்­திக்­ கவும் ஜனா­தி­பதி அழைப்பு விடுத்­தி­ருந்தார். ஆனால் இது குறித்து இப்­போது ஒரு தீர்­மானம் எட்­ டப்­பட்­டுள்­ளது. புதிய கணக்­காய்­வாளர் நிய­மிக்கப்பட்­டுள்ள நிலை­யிலும் 

முதற்­கட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும் ஜனா­தி­ப­தியை இப்­போது சந்திக்க வேண்டிய அவசியம் இல்லையென நாம் நினைக்கின்றோம். ஆகவே கோடீஸ்வரன் எம்.பி இப்போது சந்திக்க தேவையில்லை என நம் கூறியுள்ளோம். 

அவரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு