இயல்பு வாழ்வை இழந்தது மலையகம்..! வெள்ளத்தினால் இடம்பெயரும் மக்கள்..

ஆசிரியர் - Editor I
இயல்பு வாழ்வை இழந்தது மலையகம்..! வெள்ளத்தினால் இடம்பெயரும் மக்கள்..

ஹட்டன் பன்மூா் தோட்ட பகுதியில் மக்களுடைய குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீா் புகுந்துள்ளதால் பெருமளவு மக்கள் இடம்பெயா்ந்துள்ளனா். 

மலையகத்தின் நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் பல குளங்களினதும், நீர்த்தேக்கங்களினதும் நீர் மட்டம் கனிசமான அளவில் உயர்ந்துள்ளது.

இந்நிலையில பன்மூர் குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் நீர் பெருக்கெடுத்ததன் காரணமாகவே அப்பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் பாய்ந்துள்ளது.

இதன்போது, பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், 

இவர்களுக்கு அம்பகமுவ பிரதேச செயலகத்தின் இடர் முகாமைத்துவ நிலையத்தினால் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, பன்மூர் குளத்தின் அணைக்கட்டு உறுதியற்ற நிலையில் காணப்படுவதாகவும், இது எந்த வேளையிலும் உடைந்து 

பத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்ப்படுகின்றது. தற்போது மலையகத்தில் ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலை நீடிக்குமானால் 

இந்த குளத்தின் நீர் அதிகரித்து அணைக்கட்டு உடைவதுடன், பன்மூர், அலுத்கம, டிக்கோயா ஆகிய பகுதிகளில் பல வீடுகள் நீரில் மூழ்கும் ஆபத்து ஏற்படலாம் எனவும் தெரியவந்துள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு