திருகோணமலை- கன்னியாவில் கூடிய தமிழா்களை கண்டு நடுங்கிபோயிருக்கும் ஞானசார தேரா்..! புலி போல் உறுமாதீா்கள் என்கிறாா்..

ஆசிரியர் - Editor I
திருகோணமலை- கன்னியாவில் கூடிய தமிழா்களை கண்டு நடுங்கிபோயிருக்கும் ஞானசார தேரா்..! புலி போல் உறுமாதீா்கள் என்கிறாா்..

தமிழ் மக்கள் புலிகள்போல் உறுமிக் கொண்டு திரண்டு சிங்கள மக்களை அச்சுறுத்துவதை நிறுத்தவேண்டும். இது சிங்கள பௌத்த நாடு என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதுடன், கன்னியா விவகாரத்தில் தீா்மானம் சிங்கள மக்களுடையது.

மேற்கண்டவாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளா் கலகொட அத்தே ஞானசார தேரா் கூறியிருக்கின்றாா். கன்­னி­யா­வில் அமை­தி­வ­ழி­யில் போரா­டிய தமிழ் மக்­கள் மீது சிங்­க­ள­ வர்­க­ளால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல் தொடர்­பில் கேட்­ட­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

பிரச்­சி­னை­க­ளுக்­குப் போராட்­டம் என்ற பெய­ரில் அச்­சு­றுத்­தல் விடு­விப்­பதோ அல்­லது வன்­மு­றை­ க­ளில் இரு இனத்­த­வர்­க­ளும் – இரு மதத்­த­வர்­க­ளும் ஈடு­ப­டு­வதோ அழ­கல்ல. இந்த ஆட்சி இனக்­க­ ல­வ­ரத்­துக்­கும் மதத்­க­ல­வ­ரத்­துக்­கும் தூப­மிட்­டுள்­ளது. 

விரை­வில் ஆட்சி மாற்­றம் இடம்­பெ­றும். பௌத்த தேரர்­க­ளின் பங்­க­ளிப்­பு­டன் சிங்­கள ஆட்சி விரை­வில் மல­ரும். அந்த ஆட்­சி­யில் சிங்­கள, தமிழ், முஸ்­லிம் என மூவின இனத்­த­வர்­க­ளும் ஒற்­று­ மை­யாக வாழும் நில­மையை நாம் உரு­வாக்­கு­வோம் – என்­றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு