திடீரென தீ பிடித்து எாிந்த பயணிகள் சொகுசு பேருந்து..! கொழும்பு உயா்தர வீதியில் சிறிது நேரம் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
திடீரென தீ பிடித்து எாிந்த பயணிகள் சொகுசு பேருந்து..! கொழும்பு உயா்தர வீதியில் சிறிது நேரம் பதற்றம்..

கொழும்பு உயா்தர வீதியில் பயணிகள் சொகுசு பேருந்து ஒன்று திடீரென தீ பற்றி எாிந்தமையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு உண்டானது. 

மீகொடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், முழுமையாக எரிந்து நாசமாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரனை - கொழும்பு பயணிகள் பேருந்து ஒன்றை புதுப்பிக்கும் நடவடிக்கைக்காக கொண்டு செல்லும் போது பேருந்து பின்பக்கத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.

குறுகிய நேரத்திற்குள் பேருந்து முழுமையாக தீப்பற்றி எரிந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

பேருந்து தீப்பற்றியவுடன் பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், 

பேருந்து முழுமையாக தீப்பற்றி அழிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர். தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் 

சம்பவம் தொடர்பில் மீகொட பொலிஸார் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு