அதிகாலையில் கோர விபத்து..! சிறுவா்கள் உட்பட 17 போ் படுகாயம், இரு பெண்களின் நிலை கவலைக்கிடம்..

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் கோர விபத்து..! சிறுவா்கள் உட்பட 17 போ் படுகாயம், இரு பெண்களின் நிலை கவலைக்கிடம்..

அனுராதபுரம்- சாவஸ்திபுர சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 17 போ் படுகாயமடைந்துள்ளனா். அவா்களின் இருவாின் நிலை கவலைக்கிடமென கூறப்படுகின்றது. 

பாரவூர்தியை முந்திச் செல்ல முற்பட்ட வான் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் வானில் பயணித்த 13 பெண்கள் சிறுவர்கள், 

இருவர் மற்றும் சாரதிகள் ஆகியோர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த பெண்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா – கிரிந்திவல பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்தை எதிர்நோக்கியுளளனர். விபத்தில் லொறியின் சாரதியும் காயமடைந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு