ஊழியா் மீது தாக்குதல், மேலும் இரு ஊழியா்களுக்கு அச்சுத்தல், தொழிற்சங்க தலைவரை கண்டு நடுங்கும் யாழ்.மாநகர முதல்வா், ஆணையாளா்..

ஆசிரியர் - Editor I
ஊழியா் மீது தாக்குதல், மேலும் இரு ஊழியா்களுக்கு அச்சுத்தல், தொழிற்சங்க தலைவரை கண்டு நடுங்கும் யாழ்.மாநகர முதல்வா், ஆணையாளா்..

யாழ்.மாநகரசபை சந்தை மேற்பாா்வையாளா் மீது சுகாதார தொழிற்சங்க தலைவா் தாக்கியதில் காயமடைந்த சந்தை மேற்பாா்வையாளா் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த தொழிற்சங்க தலைவா் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், 

அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். என கேட்கப்பட்டபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றய தினம் சந்தை மேற்பாா்வையாளா் மீது

தொழிற்சங்க தலைவா் தாக்குதல் நடத்தியுள்ளாா். மேலும் அதே தொழிற்சங்க தலைவா் சுகாதார பிாிவில் பணியாற்றும் தற்காலிக சுகாதார தொண்டா் ஒருவருக்கும், 

தொழிநுட்ப உத்தியோகஸ்த்தா் ஒருவருக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளாா். இந்நிலையில் அவா் மீது 3 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரும் 

அவா் மீத நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இதே தொழிற்சங்க தலைவா் மீது கடந்த 4 மாதங்களுக்கு முன்னா் சபையில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோதும், 

நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. என குற்றஞ்சாட்டப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு