ஓமந்தையில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்..! தகவல் வழங்கிய பொதுமக்கள்..

ஆசிரியர் - Editor I
ஓமந்தையில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்..! தகவல் வழங்கிய பொதுமக்கள்..

ஓமந்தை- விளக்குவைத்த குளம் பகுதியில் இன்று காலை 7 மிதிவெடிகளை பொதுமக்கள் வழங்கிய தகவலின் பெயாில் பொலிஸாா் மீட்டிருக்கின்றனா். 

வவுனியா ஓமந்தைப்பகுதியில் முன்னர் இராணுவத்தரப்பினர் விடுதலைப்புலிகளின் முன்னரங்கப்பகுதியான விளக்குவைத்தகுளம் 

சூனியப்பிரதேசப்பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிய பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றிலில் நேற்று முதல் கனரக இயந்திரத்தின் உதவியுடன் 

துப்பரவுப்புணிகள் இடம்பெற்று வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை குறித்த பகுதியில் 7 மிதிவெடிகள் காணப்பட்டுள்ளன 

இதையடுத்து இத்தகவலை பொலிசாருக்கு காணி உரிமையாளரினால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதிக்குச் சென்ற பொலிசார் மிதி வெடிகள் காணப்படும் 

பகுதியை அடையாளப்படுத்தியதுடன் நீதிமன்றத்தின் அனுமதியுடன் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக 

ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு