யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா கடத்திவந்த பொலிஸ் அதிகாாி கஞ்சாவுடன் மாட்டினாா்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா கடத்திவந்த பொலிஸ் அதிகாாி கஞ்சாவுடன் மாட்டினாா்..!

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த வாகனத்திலிருந்து பெருமளவு கஞ்சா போதை பொருளை சாகவகச்சோி பொலிஸாா் மீட்டுள்ளதுடன், கஞ்சா கடத்திவந்த பொலிஸ் அதிகாாி ஒருவரை கைது செய்துள்ளனா். 

வவுனியா கல்கமுவ பகுதியிலிருந்து நேற்று வாகனம் ஒன்றில் சிலர் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவிற்குச் சென்றுள்ளனர். சாவகச்சேரிப்பகுதியில் வைத்து பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது வாகனத்தில் 

சந்தேகத்திற்கிடமான பொருளினை அவதானித்தபோது அதனுள் 4கிலோ 400கிராம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளனர். இதன்போது வாகனத்தில் பயணித்த நபர் ஒருவரை சந்தேகத்தினடிப்படையில் கைது செய்து 

விசாரணகைளை மேற்கொண்ட பொலிசார் குறித்த நபர் வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் வன்னிநாயக்க என்பர் எனத் தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட வாகனம் மற்றும் கஞ்சாவை 

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு