இந்து சமயத்தை கௌரவப்படுத்தும் ஆளுநா் சுரேன் ராகவன்..! 5 முக்கிய ஸ்தலங்களை அடையாளப்படுத்தும் முத்திரைகள் வெளியீடு..

ஆசிரியர் - Editor I
இந்து சமயத்தை கௌரவப்படுத்தும் ஆளுநா் சுரேன் ராகவன்..! 5 முக்கிய ஸ்தலங்களை அடையாளப்படுத்தும் முத்திரைகள் வெளியீடு..

இந்து சமயம் சாா்ந்த 5 முக்கிய ஸ்தலங்களை குறிக்கும் முத்திரைகள் வெளியிடப்படும் என வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் கூறியுள்ளாா். 

யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் இந்துக் கோயில்களுக்கான நிதிஉதவி வழங்கும் நிகழ்வில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் மாதம் குறிக்கும் முத்திரைகளை வெளியிடத் தீர்மானித்துள்ளோம்.

தமிழ்க் கடவுளாகப் போற்றப்படுகின்ற வள்ளுவப்பெருமானின் முத்திரையைக் கூட வெளிடத்தயாராக உள்ளேன்.

வடமாகாணத்தில் உள்ள இந்துக்களின் முக்கிய ஸ்தலங்களாகக் கருதப்படும் விடயங்களை இந்து அமைப்புக்கள், நல்லை ஆதீனம் 

மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு