திடீரென நிலத்தை நோக்கி வந்த கடல்நீா்..! பதறியடித்து ஓடிய மக்கள்..

ஆசிரியர் - Editor I
திடீரென நிலத்தை நோக்கி வந்த கடல்நீா்..! பதறியடித்து ஓடிய மக்கள்..

தென்னிலங்கையில் திடீரென கடல்நீா் நிலத்திற்குள் நுழைந்தமையால் இன்று காலை பெரும் பதற்றம் உருவானது. 

அம்பலங்கொட, கஹவ பிரதேசத்தில் இருந்து கொடகம வரை ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு கடல் நீர் தரைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக காலி - கொழும்பு பிரதான வீதிக்கு கல் மற்றும் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இன்றையதினம் கடல் மிகவும் கொந்தளிப்பு நிலையில் காணப்படும் என வளிமண்டவியல் திணைக்களம் நேற்று எச்சரித்திருந்தது.

இதன் காரணமாக கடல் நீர் தரைக்கு வந்திருக்கலாம் எனவும், அடிக்கடி இந்த பகுதியில் கடல் நீர் தரைக்கு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு