பிரதேச செயலா் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள்..! விசாரணை தொடங்கிய நிலையில் ஓய்வு கேட்டவருக்கு அதிா்ச்சி..

ஆசிரியர் - Editor I
பிரதேச செயலா் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள்..! விசாரணை தொடங்கிய நிலையில் ஓய்வு கேட்டவருக்கு அதிா்ச்சி..

வவுனியா வடக்கு பிரதேச செயலா் தன் சுய விருப்பின் பெயாில் ஓய்வுக்கு விண்ணப்பித்த நிலையில் மாவட்ட செயலா் அதனை நிராகாித்துள்ளாா். 

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் செயலாளராக கடந்த 15 ஆண்டுகளாப் பணியாற்றும் பரந்தாமன் தனது 57 ஆவது வயதில் சுய விருப்பின் பெயரில் ஓய்வு பெற விரும்புவதாக மாவட்டச் செயலாளருக்கு எழுத்தில் விண்ணப்பித்துள்ளார். 

இருப்பினும் தற்போது குறித்த செயலாளருக்கு எதிராக சிலர் முறைப்பாடுகளை முன் வைத்து அதற்காக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது . அவ்வாறு விசாரணை ஒன்றிற்கு உத்தரவிடப்பட்ட நிலையில் பதவி ஓய்விற்கு விண்ணப்பிக்க முடியாது.

எனக் காரணம் காட்டியே குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் குறித்த பிரதேச செயலாளர் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆராயும் வகையில் பி்ரதேச செயலாளரை அப் பகுதியில் இருந்து மாற்றி 

மாவட்டச் செயலகத்தில் இணைப்புச் செய்வதன் மூலமே விசாரணையை முன்கொண்டு செல்ல முடியும் என அமைச்சின் செயலாளரிற்கு மாவட்டச் செயலாளர் பரிந்துரைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு