மந்திகை வைத்தியசாலைக்குள் வாள்களுடன் நுழைந்த காவாலிகள், நோயாளி மீதும், பொலிஸாா் மீதும் தாக்குதல்.. போராட்டத்தில் ஊழியா்கள்.

ஆசிரியர் - Editor I
மந்திகை வைத்தியசாலைக்குள் வாள்களுடன் நுழைந்த காவாலிகள், நோயாளி மீதும், பொலிஸாா் மீதும் தாக்குதல்.. போராட்டத்தில் ஊழியா்கள்.

யாழ்.மந்திகை ஆதார வைத்தியசாலைக்குள் புகுந்த காவாலி கும்பல் நோயாளிகை தாக்கியதை கண்டித்தும், பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோாியும் வைத்தியசாலை ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனா். 

மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள், நோயாளர்கள், மருத்துவமனைக்கு முன்னால் ஒன்றுகூடி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர் ஒருவரை 

இனந்தெரியாத காவாலி கும்பல் மருத்துவமனை விடுதிக்குள் நேற்றிரவு புகுந்து நோயாளா் ஒருவா் மீதும், பொலிஸாா் மீதும் தாக்குதல் நடத்தியதுடன், தாதியர்கள், உத்தியோகத்தர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்தே தற்போது ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு