என்னிடம் அடிவாங்க முன்னா் அந்த நாயை கட்டிப்போடுங்கள்..! பிரதமாிடம் ஞானசார தேரா் கோாிக்கை..

ஆசிரியர் - Editor I
என்னிடம் அடிவாங்க முன்னா் அந்த நாயை கட்டிப்போடுங்கள்..! பிரதமாிடம் ஞானசார தேரா் கோாிக்கை..

எங்களிடம் அடிவாங்கும் முன்னா் அந்த நாயை தயவு செய்து கட்டிப்போடுங்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளா் கலகொட அத்தே ஞானசார தேரா் பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கோாிக்கை விடுத்திருக்கின்றாா். 

வெயாங்கொட பிரதேசத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டில் கூக்குரல் இட்டுத் திரியும் 90இற்றும் அதிகமான பிக்குகள் பாலியல் 

துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டவர்கள் எனவும் அதனால் மன அழுத்தங்களுக்கு உட்பட்டதனாலேயே இவ்வாறு தேரர்கள் குரோதத்துடன் காணப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவின் குறித்த கருத்தினால் ஆத்திரமடைந்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த நாட்டில் 2500 வருடங்கள் மதப் போதனை செய்து வருகின்ற பௌத்த பிக்குகளுக்கு 

செய்ய முடியுமான உயர்ந்த பட்ச இழிவை ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவர் செய்துள்ளார் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு