சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லுாாிக்கு 5.5 மில்லியன் செலவில் புதிய பொதுநோக்கு மண்டபம்..! அடிக்கல் நாட்டினாா் பிரதமா்..

ஆசிரியர் - Editor I
சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லுாாிக்கு 5.5 மில்லியன் செலவில் புதிய பொதுநோக்கு மண்டபம்..! அடிக்கல் நாட்டினாா் பிரதமா்..

யாழ்.சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லுாாியன் பொதுநோக்கு மண்டபத்திற்கான அடிக்கல் பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று நாட்டிவைக்கப்பட்டது. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரதமர் கட்சி உறுப்பினர்கள் உட்பட பல தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் சுன்னாகம் ஸ்கந்வராதோய பாடசாலையின் 25 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார் .

இதன்போது அப் பாடசாலையில் 5.5 மில்லியின் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொது நோக்கு மண்டபத்திற்கு அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பாடசாலையின் 25 ஆவது ஆண்டு விழா பரிசளிப்பு நிகழ்விலும் அப்ப விருந்தினராக கலந்து கொண்டு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், 

ஈஸ்வரபாதம் சரவணபவன் உட்பட கல்வி அதிகாரிகள் மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு