நாற்குழி சிங்கள குடியேற்ற பகுதியில் அவசர அவசரமாக திறக்கப்பட்ட பௌத்த விகாரை..!

ஆசிரியர் - Editor I
நாற்குழி சிங்கள குடியேற்ற பகுதியில் அவசர அவசரமாக திறக்கப்பட்ட பௌத்த விகாரை..!

யாழ்.நாவற்குழி பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்ற பகுதியில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை திறப்பு விழா இன்று இடம்பெற்றது. 

சம்புத்தி சுமன என பெயரிடப்பட்டுள்ள இந்த விகாரை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. 

இன்றைய திறப்பு விழாவில் நூற்றுக்கணக்கான பௌத்த மதகுருமார்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதற்கு முன்னோடியாக, குருநாகல் நெவகட செல்கிரி விகாரையிலிருந்து நேற்று காலை 8 மணிக்கு நாவற்குழி நோக்கி பேரணியாக புறப்பட்ட விகாரைக்கான புனித தாது, 

அநுராதபுரம் தூபராம சைத்திய விகாரையை நேற்று இரவு வந்தடைந்தது. 2010ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் 

நாவற்குழி ரயில் நிலையத்திற்கு அருகில், நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் அத்துமீறி குடியிருந்தனர்.

தமிழர்களுக்கு எதிரான மனநிலையுடன், நாவற்குழி தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் சிங்களவர்கள் அத்துமீறி குடியமர்த்தப்பட்டனர்.

அந்த மக்களுக்கு நிரந்தர குடியிருப்புக்களை அமைக்க அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஹெல உறுமய உதவிபுரிந்தது.

பின்னர் விகாரை அமைக்கும் பணி ஆரம்பித்தபோது, சாவகச்சேரி பிரதேசசபையினால் அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

அதன்பின்னர் அமைச்சர் சஜித்தின் தலையீட்டையடுத்து, சாவகச்சேரி பிரதேசசபையும் விகாரை அமைக்க அனுமதியளித்தது.

தமிழர்கள் வாழும் பகுதிகள் சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக தமிழ் மக்கள் மற்றும் தமிழ் தலைமைகளினால் பரவலாக குற்றம் சுமத்தப்பட்டுவரும் நிலையில், 

யாழ்ப்பாணத்தில் இவ்வாறு விகாரை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு