மின்சாரசபையின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் 9 சிங்கள இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு..! தமிழ் இளைஞா்கள் வீதியில்..

ஆசிரியர் - Editor I
மின்சாரசபையின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் 9 சிங்கள இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு..! தமிழ் இளைஞா்கள் வீதியில்..

யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிராந்திய அலுவலகத்திற்கு தென்னிலங்கையைச் சேர்ந்த 9 இளைஞர்களுக்கு இரகசியமான முறையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த வருடம் இடம்பெற்ற அரசியல் மாற்றத்தின் பின்னர் தென்னிலங்கையிலிருந்து 61 இளைஞர்களை அரச வேலைக்கு அமர்த்தும் சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் 

குறித்த விடயத்தினை நிறுத்துமாறு உரிய அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சிறிது காலம் தென்னிலங்கையிலிருந்து இளைஞர்கள் வடக்கிற்கு வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்பட்ட நிலையில் 

தற்போது மீண்டும் நேற்றைய தினம் இலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய அலுவலகத்திற்கு ஒன்பது இளைஞர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள் .

இவ்வாறு பணி வழங்கப்பட்டுள்ள இளைஞர்களில் முகாமைத்துவ உதவியாளர்களாக மூவரும் சாரதியாக ஆறுபேருமாக ஒன்பது பேர் வடக்கிற்கு நியமனம் பெற்று வந்துள்ளார்கள் வடக்கில் பல இளைஞர் யுவதிகள் வேலையில்லாத நிலையில் 

மத்திய அரசானது தென்னிலங்கையிலிருந்து வடக்கிற்கு நியமனம் வழங்குவது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது . இதேநேரம் நியமிக்கப்பட்டுள்ள 9பேரில். ஒருவர் மட்டுமே கல்முனையைச் சேர்ந்த தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு