மீண்டும் ஒரு பாாிய தற்கொலை தாக்குதலுக்கு திட்டம். அதிா்ச்சியில் இலங்கை..! 11 தீவிரவாதிகள் கைது, பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு.

ஆசிரியர் - Editor I
மீண்டும் ஒரு பாாிய தற்கொலை தாக்குதலுக்கு திட்டம். அதிா்ச்சியில் இலங்கை..! 11 தீவிரவாதிகள் கைது, பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு.

தேசிய தெவ்ஹீத் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்த்தா் அஹமத் மிலான் வழிகாட்டலில் பாாிய தற்கொலை தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிடப்பட்டமை அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

பல இடங்களில் தாக்குதல் மேற்கொள்வதற்கு 11 தற்கொலைதாரிகள் தயார் நிலையில் இருந்ததாக பயங்கரவாத விசாரணை பிரிவு விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலுக்காக கல்முனை சியாம் மற்றும் மொஹமட் நிஸான் என்பவர்கள் உதவியுள்ள நிலையில் அவர்கள் கிழக்கு மாகாணத்தில் 5 வீடுகளை வாடகைக்கு பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய நீர்கொழும்பில் வீடு ஒன்றில் இருந்து லொரி ஒன்று வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு 

சம்மாந்துறைக்கு சென்றுள்ளதாக சம்பந்தப்பட்ட சாரதி ஒருவர் தெரிவித்துள்ளார். பெருந்தொகை இரசாயன திரவங்கள் அடங்கிய 

பெரல்கள் லொரியில் ஏற்றப்பட்டதாக சாரதி தெரிவித்துள்ளார். எனினும் குறித்த பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய 

அனைத்து தேசிய தவ்ஹித் ஜமாத் பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு