நீதிமன்ற கட்டளையை எதிா்த்து கண்டன ஊா்வலம்..! தீா்க்கப்படாத மன்னாா் திருக்கேதீஸ்வரம் ஆலய விவகாரம்..

ஆசிரியர் - Editor I
நீதிமன்ற கட்டளையை எதிா்த்து கண்டன ஊா்வலம்..! தீா்க்கப்படாத மன்னாா் திருக்கேதீஸ்வரம் ஆலய விவகாரம்..

மன்னாா் திருக்கேதீஸ்வரம் ஆலய வீதி வளைவை மீள கட்டுவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், நீதிமன்ற உத்தரவை கண்டித்து வவுனியாவில் இன்று காலை பாாிய கண்டன ஊா்வலம் நடாத்தப்பட்டுள்ளது. 

கந்தசாமி கோவில் முன்பாக ஒன்றுகூடியவர்கள் ஊர்வலமாக, வவுனியா வைத்தியசாலை ஊடாக மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தனர்.அமைச்சர் மனோ கணேசனிடம் ஒப்படைப்பதற்கான மனுவை மாவட்ட செயலக 

நிர்வாக உத்தியோகத்தரிடம் கையளித்தனர். வவுனியா மாவட்டத்தை சேர்ந்த இந்து ஆலயங்களின் ஒன்றியம்,வெங்கல செட்டிகுளம் இந்து ஆலயங்களின் ஒன்றியம், வவுனியா வடக்கு இந்து ஆலயங்களின் ஒன்றியம் என்பன இணைந்து ஊர்வலத்தை நடத்தின.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு