பருத்துறையில் தொடரும் கொள்ளை..! வீட்டுக்குள் புகுந்து கா்பிணி பெண் மீதும் தாக்குதல், பெருமளவு நகை கொள்ளை..

ஆசிரியர் - Editor I
பருத்துறையில் தொடரும் கொள்ளை..! வீட்டுக்குள் புகுந்து கா்பிணி பெண் மீதும் தாக்குதல், பெருமளவு நகை கொள்ளை..

யாழ்.பருத்துறை- உபயகதிா்காமம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவா்களை அடித்து அச்சுறுத்திவிட்டு பெருமளவு பணம், நகை, பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளது. 

அதி­காலை 2 மணியளவில் வீட்­டின் முன்­க­தவை உடைத்­துக்­கொண்டு சென்ற மூன்­று­ பேர் கொண்ட கும்­பல் அங்­கி­ருந்­த­வர்­களை கொட்­டன்­க­ளால் தாக்­கி­விட்டு வீட்­டி­னுள் நீண்­ட­நே­ரம் தேடு­தல் நடத்தி வீட்­டில் இருந்த நான்கு பவுண் தங்க நகை­களை கொள்­ளை­ய­டித்து 

சென்­றது என்று பொலிஸ் முறைப்­பாட்­டில் பதி­வு­ செய்­யப்­பட்­டுள்­ளது. தாக்­கு­த­லில் படு­கா­ய­ம­ டைந்த கர்ப்­பி­ணிப் பெண் மந்­திகை வைத்தியசாலையில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­து­டன் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

வட­ம­ராட்­சிப் பகு­தி­யில் சமீ­ப­கா­ல­மாக அதி­க­ரித்­து­வ­ரும் கொள்­ளைச் சம்­ப­வங்­க­ளால் அந்­தப் பகுதி மக்­கள் அச்­சத்­தில் உள்­ள­னர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு