மோட்டாா் சைக்கிளில் சென்றவா்களை மோதிவிட்டு தப்பி ஓடிய சாரதி.. மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிஸாாிடம் ஒப்படைத்த மக்கள்.

ஆசிரியர் - Editor I
மோட்டாா் சைக்கிளில் சென்றவா்களை மோதிவிட்டு தப்பி ஓடிய சாரதி.. மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிஸாாிடம் ஒப்படைத்த மக்கள்.

மோட்டாா் சைக்கிளில் பயணித்தா் மீது வாகனத்தால் மோதி விபத்தை உண்டாக்கிவிட்டு தப்பி ஓடிய வாகனத்தை அப்பகுதி இளைஞா்கள் துரத்தி சென்று மடக்கி பிடித்து பொலிஸாாிடம் ஒப்ப டைத்துள்ளனா். 

வவுனியா- மன்னார் பிரதான வீதியில் இன்று காலை விபத்து நடந்துள்ளது.வவுனியா நகரிலிருந்து இராசேந்திரகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற வான், 

வேப்பங்குளம் பகுதியில் பின்புறமாகப் பயணித்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியது. மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும், மகனும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

எனினும் வானின் சாரதி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். இதனை அவதானித்த மக்கள், வானைப் பின் தொடர்ந்து சென்று மடக்கிக் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.வான் மற்றும் மோட்டார் 

சைக்கிளை வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸார் எடுத்துச் சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு