கொழும்பிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த வாகனம் விபத்து..! 3 போ் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I
கொழும்பிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த வாகனம் விபத்து..! 3 போ் ஆபத்தான நிலையில்..

திருகோணமலை- கந்தளாய் சேருவில பகுதியில் பயணிகள் ஹயஸ் வாகனம் பாலத்தின் மீது  மோதி விபத்துக்குள்ளானதில் 3 போ் படுகாயமடைந்துள்ளனா். 

குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது பலத்த காயங்களுக்கு உள்ளான மூவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூதூர், தோப்பூர் பகுதியை சேர்ந்த 35, 32 மற்றும் 15 வயதுடைய மூவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பிலிருந்து மூதூர் பகுதிக்கு சென்ற வானே விபத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், அதிக வேகமும் சாரதியின் தூக்கமுமே விபத்துக்கு காரணமென 

சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு