பாடசாலை உணவகத்தில் விற்கப்பட்ட உணவு நஞ்சானது..! 13 மாணவா்கள் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
பாடசாலை உணவகத்தில் விற்கப்பட்ட உணவு நஞ்சானது..! 13 மாணவா்கள் வைத்தியசாலையில்..

சாய்ந்தமருது அஸ்ரப் வித்தியாலய மாணவா்கள் 13 போ் திடீா் வயிற்றுவலி காரணமாக சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். 

பாடசாலை உணவகத்தில் உணவருந்தியதாலேயே மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

மாணவர்கள் உட்கொண்ட உணவின் பகுதிகளையும், மாதிரிகளையும் பரிசோதனைக்காக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய 

பொது சுகாதார பரிசோதகர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு