வா்த்தக நிலையத்திற்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்..! வவுனியாவில் சம்பவம் இருவா் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
வா்த்தக நிலையத்திற்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்..! வவுனியாவில் சம்பவம் இருவா் படுகாயம்..

வவுனியா புகைரத நிலைய வீதியில் உள்ள வா்த்தக நிலையம் ஒன்றுக்குள் இன்று காலை புகுந்த வாள்வெட்டு குழு வா்த்தக நிலையத்திற்குள் இருந்தவா்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது. 

இந்த தாக்குதலில் இருவா் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். 

குறித்த வா்த்தக நிலைய உாிமையாளருக்கும், அதன் அருகில் உள்ள பழக்கடை உாிமையாளருக்குமிடையில் வாய்த்தா்க்கம் உண்டாகியிருக்கின்றது. 

இதனையடுத்து பட்டா ரக வாகனத்தில் பழ வியாபாரம் மேற்கொண்ட நபர், இளைஞர் குழுவை வரவழைத்து தாக்குதல் மேற்கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் வர்த்தக நிலையத்தில் கடமையாற்றும் இரு ஊழியர்கள் காயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு