5G கோபுரங்களால் பாதிப்பா? ஆராய்கிறது யாழ்.போதனா வைத்தியசாலை..

ஆசிரியர் - Editor I
5G கோபுரங்களால் பாதிப்பா? ஆராய்கிறது யாழ்.போதனா வைத்தியசாலை..

யாழ்.குடாநாட்டில் சர்ச்சையை உண்டாக்கியிருக்கும் தொலைதொடர்பு கோபுரங்கள் தொடர்பாக ஆய்வுகள் நடத்த யாழ்.போதனா வைத்தியசாலை ஆவணப்படுத்தவுள்ளதாக பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் மட்டுமன்றி மாவட்டம் முழுமையாக தற்போது குறித்த வகை கம்பங்கள் பொருத்தப்படுவதனால் இதன் மூலம் வைத்திய ரீதியாக பாதிப்புக்கள் ஏற்படும் அதே நேரம் சிறுவர்கள் மற்றும் கர்ப்பவதிகள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுவதனால் 

அச்சம் ஏற்படுவதாக பலரும் தொடர்பு கொண்ட நிலையிலேயே இதனை ஓர் ஆய்விற்கு உட்படுத்தும் நோக்கில் போதனா வைத்தியசாலையில் பல தரப்பட்ட வைத்திய நிபுணர்களும் உள்ளமையினால் இதனை ஓர் மக்கள் நன்மை கருதியவிடயமாக மேற்கொள்கின்றோம்.

 இந்த நிலையில் இதுவரை மேற்கொண்ட தேடல்களின் அடிப்படையில் பாதிப்பு உள்ளதாக கூறப்படும் எந்த தகவல்களும் உறுதி செய்யப்படவில்லை. அதனால் தொடர்ந்தும் தேடல்களும் ஆய்வுகளுமே இடம்பெறுகின்றன.

இதேநேரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உள்ளே முக்கிய சத்திர சிகிச்சைக் கூடங்கள் மற்றும் கட்டிடங்களில் போதிய அலைவரிசைகள் இன்மை காரணமாக அவற்றினை பொருத்தி தருமாறு 

நாம் விடுத்த கோரிக்கையின் பெயரில் வைத்தியசாலையின் உள்ளே சிகிச்சை கூடங்களில் 5 சிறிய வகை பூஸ்ரர் அன்ரனாக்கள் பொருத்தப்பட்டுள்ளமையும் உண்மையான விடயமே என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு