6 மாதங்கள் வறட்சியி்ன் பின் ஐஸ்கட்டி மழை..! இலங்கையில் தொடரும் குழப்பமான காலநிலை..

ஆசிரியர் - Editor I
6 மாதங்கள் வறட்சியி்ன் பின் ஐஸ்கட்டி மழை..! இலங்கையில் தொடரும் குழப்பமான காலநிலை..

பொலனறுவை மாவட்டத்தில் தொடா்ச்சியாக 6 மாதங்கள் கடுமையான வறட்சி நிலவிவந்த நிலையில், இன்றைய தினம் ஐஸ்கட்டி மழை பெய்திருக்கின்றது. 

வெலிகந்தை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஐஸ் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் மன்னம்பிட்டி பகுதியிலும் ஐஸ் மழை பெய்துள்ளது.

பொலன்நறுவையில் கடந்த ஆறு மாதங்களாக நிலவிய வறட்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அத்துடன் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவியது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு