4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை..! நீதிபதி இளஞ்செழியன் அதிரடி..

ஆசிரியர் - Editor I
4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை..! நீதிபதி இளஞ்செழியன் அதிரடி..

திருகோணமலை- சேருநுவர பகுதியில் 4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை விதித்து திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிவதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளாா். 

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளவர் சேருநுவர சிரிதுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நாகஸ்கெதர துஷார மனோஜ் எனவும் தெரியவருகின்றது.

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிதுவ பகுதியில் தன் மனைவியின் முதல் கணவருடைய நான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு எதிராக வழக்கு இடம்பெற்றுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நான்கு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தமைக்காக 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும், 3000 ரூபாய் தண்டம் செலுத்துமாறும் 

அப்பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு மாத கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறும், 

அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு