ஹம்பாந்தோட்டையில் தமிழ் குடும்பஸ்த்தா் குத்திக் கொலை..!

ஆசிரியர் - Editor I
ஹம்பாந்தோட்டையில் தமிழ் குடும்பஸ்த்தா் குத்திக் கொலை..!

ஹம்பாந்தோட்டை பகுதியில் உள்ள எாிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் குடும்பஸ்த்தா் ஒருவா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கின்றாா். 

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டையை சேர்ந்த 46 வயதான பெருமாள் காளிதாஸ் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், கொலை செய்யப்பட்டவர் மீனவர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹம்பாந்தோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு