கொக்குவில் பகுதியில் ஆவா குழு அட்டகாசம்..! 3 வீடுகள் அடித்து நொருக்கப்பட்டது, வீட்டிலிருந்தவா்கள் மீதும் தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
கொக்குவில் பகுதியில் ஆவா குழு அட்டகாசம்..! 3 வீடுகள் அடித்து நொருக்கப்பட்டது, வீட்டிலிருந்தவா்கள் மீதும் தாக்குதல்..

யாழ்.கொக்குவில் பிடாாி கோவிலடி பகுதியில் நேற்று நள்ளிரவு தொடா்ச்சியாக 3 வீடுகளுக்குள் புகுந்த ஆவா குழு ரவுடிகள் வீடுகளை அடித்து நொருக்கியதுடன், வீட்டிலிருந்தவா்கள் மீது தாக்கு தல் நடாத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றனா். 

3 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டுத் தப்பித்தது என்று பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலுக்கு அண்மையாக உள்ள 

மூன்று வீடுகளில் நேற்று (ஜூலை 8) திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றது. வன்முறைக் கும்பல், வீடுகளின் படலை, யன்னல்கள் உள்பட பெறுமதியான தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது 

என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு