ஈச்சமோட்டை பகுதியில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த ஆவா குழு ரவுடி கைது..

ஆசிரியர் - Editor I
ஈச்சமோட்டை பகுதியில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த ஆவா குழு ரவுடி கைது..

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடா்புடைய முக்கிய ரவுடி ஈச்சமோட்டை பகுதியில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த நிலையில் பொலிஸாாினால் கைது செய்யப்பட்டிருக்கின்றாா். 

ஈச்சமெட்டை பகுதியில் நேற்று இரவு பொலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இளைஞர் ஒருவர் கஞ்சா போதைப் பொருளை நுகர்ந்து கொண்டு இருந்த போது மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். பிடிக்கப்பட்டவரிடம் நடத்திய சோதணையின் போது 

அவரிடம் இருந்து மேலதிகமாக 30 மில்லிகிராம் கஞ்சா போதைப் பெர்ருளினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.  சான்றுப் பொருளுடன் கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காக யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட குறித்த இளைஞர் மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுத்தப்பட்டுள்ளார். குறித்த நபர் விசாரணையின் முடிவில் 

யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு