கோவையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி..!

ஆசிரியர் - Editor I
கோவையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி..!

கோவை அருகே, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். தமிழகத்தின் கோவை மாவட்டம் கணபதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். 

இவர், சரவணம்பட்டி அருகே கீரணத்தம் லட்சுமி கார்டன் பகுதியில் வெண்பன்றி வளர்ப்பு பண்ணை நடத்தி வருகிறார். அங்கு, 20 அடி நீளமும், 40 அடி அகலமும், 20 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் தொட்டி உள்ளது.

இதை சுத்தம் செய்வதற்காக நேற்று காலை கோவை கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த ராசப்பன் (38), பொன்மாலை என்பவரின் மகன் வேடியப்பன் (29), பெருமாள் என்பவரின் மகன் மற்றொரு வேடியப்பன் (26) 

ஆகிய 3 தொழிலாளர்கள் சென்றனர்.முதலில், ராசப்பன் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினார். உள்ளே இறங்கியதும் திடீரென்று விஷவாயு தாக்கியதால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வெளியேற முயன்றார். ஆனால், அவரால் வெளியேற முடியாததால் ‘காப்பாற்றுங்கள்’ என்று சத்தம் போட்டபடி மயங்கி விழுந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற 2 தொழிலாளர்களும், ராசப்பனை காப்பாற்றுவதற்காக தொட்டிக்குள் இறங்கினர். அவர்களையும் விஷவாயு தாக்கியது. இதனால், கண் இமைக்கும் நேரத்தில் 3 பேரும் விஷ வாயு தாக்கி 

கழிவுநீர் தொட்டிக்குள்ளேயே விழுந்து பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையே, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய வந்தவர்களை காணவில்லை என்று சுப்பிரமணியம் தொட்டிக்குள் எட்டிப்பார்த்தார். 

அங்கு 3 பேரும் பிணமாக கிடந்தனர். இது குறித்து அவர் கொடுத்த தகவலின் பேரில், கணபதி தீயணைப்பு வீரர்கள் மற்றும் கோவில்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

அவர்கள், 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியான சம்பவம், 

அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு