பிரசவம் முடித்து வீடு திரும்பிய பெண் உயிாிழந்த பாிதாபம்..!

ஆசிரியர் - Editor I
பிரசவம் முடித்து வீடு திரும்பிய பெண் உயிாிழந்த பாிதாபம்..!

சாவகச்சோி- மீசாலையை சோ்ந்த பெண் ஒருவா் பிரசவம் முடிந்து வீடு திரும்பிய நிலையில் உயிாிழந்துள்ளாா். 

மீசாலை, மேற்கு சாவகச்சேரியை சேர்ந்த குபேந்திரன் லோஜிதா என்ற 37 வயது பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த பெண் கடந்த 17ஆம் திகதி பிரசவத்திற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 

அவருக்கு சத்திரசிகிச்சை மூலம் ஆண் குழந்தையொன்று பிறந்துடன், தாயும், சேயும் கடந்த 19ஆம் திகதி வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பகுதியில் கிருமித்தொற்று ஏற்பட்டதாக தெரிவித்து நேற்று முன் தினம் 

மீண்டும் குறித்த பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றைய தினம் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு