20ற்கும் மேற்பட்ட படகுகள் எாிந்து நாசம்..! திட்டமிட்ட நாசகார செயல் என பொலிஸாா் முடிவு..

ஆசிரியர் - Editor I
20ற்கும் மேற்பட்ட படகுகள் எாிந்து நாசம்..! திட்டமிட்ட நாசகார செயல் என பொலிஸாா் முடிவு..

ஹூங்கமை – குருபொகுன கடற்பரப்பில் நேற்று இரவு 20ற்கும் மேற்பட்ட படகுகள் தீயிட்டு கொடுத்தப்பட்டமை திட்டமிட்ட நாசகார செயல் என பொலிஸாா் தொிவித்துள்ளனா். 

நேற்றைய தினம் குறித்த பகுதியில் உள்ள மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்லாதிருந்தனர்.

இதன்காரணமாக அதிகளவிலான மீன்பிடி படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதன்போது அந்த பகுதியில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீயினால், 20 இற்கும் மேற்பட்ட படகுகள் எரியுண்டுள்ளன.

இதுதவிர மீன்பிடி வலைகள், படகு இயந்திரங்கள் உள்ளிட்ட பல உபகரணங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் குறித்த பகுதியில் இரண்டு மீனவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாட்டின் பிரதிபலனாக இந்த தீ மூட்டல் சம்பவம் இடம்பெற்றிருக்க கூடும் 

என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு