மருத்துவமனை மலசல கூடத்திற்குள் துாக்கிட்டு தற்கொலை செய்த கைதி..!

ஆசிரியர் - Editor I
மருத்துவமனை மலசல கூடத்திற்குள் துாக்கிட்டு தற்கொலை செய்த கைதி..!

நீா்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவா் இன்று அதிகாலை சிறைச்சாலை மருத்துவமனையில் உள்ள மலசல கூடத்திற்குள் துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளாா். 

திவுலபிட்டிய பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்று தொடர்பாக குறித்த கைதி சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு, பொலிஸாரால் திவுபலப்பிட்டிய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். 

இந் நிலையிலேயே அவர் இவ்வாறு துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொடதெனியாவை சேர்ந்த கொடிகாபத்தல கெதர நாலாக பிரசன்ன குமார (வயது 40)  என்ற நபரே

இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு