உயிருடன் இருக்கிறாரா சஹ்ரான்? - மறுக்கிறது பொலிஸ்

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் தற்போதும் உயிருடன் உள்ளாரென வெளிவரும் செய்திகளை பொலிஸ் பேச்சாளர் முற்றாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர வெளிவரும் இதுபோன்ற செய்திகளை மறுத்துள்ளார்.
'தற்கொலைதாரி சஹ்ரான் சங்கரிலா ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தது அங்குள்ள சிசிரிவி கமரா மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் உயிரிழந்ததை மேலும் உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனைக்காக அவரது உடற்பாகங்கள் எடுக்கப்படும். இவ்வாறு எடுக்கப்படும் உடற்பாகங்கள் சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது சகோதரர்களான றில்வான் மற்றும் சைனியின் டிஎன்ஏ பரிசோதனையுடன் ஒப்பிடப்படும்.
அத்துடன் மகளின் இந்த டி என்ஏ மாதிரிகள் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சஹ்ரானின் மகளுடனும் பரிசோதனை மேற்கொள்ளப்டும் எனவும் அவர் தெரிவித்தார்.