அவா்கள் மத வெறியா்கள் அல்ல..! தம் இனத்தின் மீது பற்றும் கொள்கையும் உள்ளவா்கள். அதனால் மக்கள் ஆதாித்தாா்கள். கூறியது ஜனாதிபதி..

ஆசிரியர் - Editor I
அவா்கள் மத வெறியா்கள் அல்ல..! தம் இனத்தின் மீது பற்றும் கொள்கையும் உள்ளவா்கள். அதனால் மக்கள் ஆதாித்தாா்கள். கூறியது ஜனாதிபதி..

தமிழீழ விடுதலைப் புலிகள் மதவெறி பிடித்தவர்கள் அல்லர் அவர்கள் தமது இனத்துக்காக இறுதிவரை போராடினார்கள். கொள்கையுடன் அவர்கள் போராடியதால் தான் அவர்களை தமிழ் மக்கள் ஆதரித்தார்கள் இதுதான் உண்மை என வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளை ஐ.எஸ் அமைப்புடன் ஒப்பிட முடியாது. விடுதலைப் புலிகள் இப்படி ஒருநாளில் ஈவிரக்கமின்றி தொடர் தாக்குதல்களை நடத்தியதில்லை ஆனால் ஐ.ஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கொள்கை இல்லாமல் சில பன்னாட்டு சதிவலைக்குள் சிக்கி ஆட்டம் போடுகிறார்கள்.

இந்த ஆட்டத்தை நாம் விரைவில் அடக்கி காட்டுவோம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு