இராணுவ முற்றுகையை உடைக்க 3 குண்டுகளை வெடிக்கவைத்த தீவிரவாதிகள்.. அதிா்கிறது கிழக்கு மாகாணம்.

ஆசிரியர் - Editor I
இராணுவ முற்றுகையை உடைக்க 3 குண்டுகளை வெடிக்கவைத்த தீவிரவாதிகள்.. அதிா்கிறது கிழக்கு மாகாணம்.

கல்முனை- சாய்ந்தமருது பகுதியில் இன்று மாலை தீவிரவாதிகளின் பிரதான முகாமை இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினா் இணைந்து முற்றுகையிட்ட நிலையில், 3 குண்டுகள் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. 

இராணுவ முற்றுகைக்குள் இருந்து தப்பி ஓடிய தீவிரவாதி ஒருவா் அணிந்திருந்த தற்கொலை அங்கியை வெடிக்கைவைத்துள்ளாா். இதேபோல் இராணுவ முற்றுகையை உடைக்க முடியாத நிலையில் முஸ்லிம் தீவிரவாதிகள் 2 குண்டுகளை வெடிக்கவைத்துள்ளனா். 

எனினும் முற்றுகையை இறுக்கி தீவிரவாதிகளையும் பெருமளவு வெடிகுண்டுகள் மற்றும் தளபாடங்களை மீட்டிருக்கின்றனா். இதனால் கிழக்கு மாகாணத்தில் தற்போதுவரை பதற்றமான சூழல் நீடிப்பதாக அங்கிருந்து எமது செய்தியாளா் தொிவிக்கின்றாா். 

மேலும் சேத விபரங்கள் தொடா்பான தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு