இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம்; 4 நாட்களுக்கு முன்பே எச்சரித்த இந்திய உளவுத்துறை!

ஆசிரியர் - Admin
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம்; 4 நாட்களுக்கு முன்பே எச்சரித்த இந்திய உளவுத்துறை!

கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்தனர். 

இந்நிலையில், கொழும்பு நகரிலுள்ள 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் 3 ஓட்டல்கள் ஆகியவற்றில் இன்று காலை 8.45 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. 

இதில், கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், கடலோர நகரான நெகோம்போவில் உள்ள புனித செபாஸ்டியான் ஆலயம் மற்றும் பட்டிகலோவாவில் உள்ள ஆலயம் என 3 கிறிஸ்தவ ஆலயங்கள் சேதமடைந்தன.

இதேபோன்று ஷாங்கிரிலா, தி சின்னமோன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய 3 ஓட்டல்களிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவத்தில் 129 பேர் உயிரிழந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்படலாம் என 4 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

அந்நாட்டில் 4 நாட்களுக்கு முன், லேசான குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோதே இந்திய உளவுப்பிரிவு இலங்கையை எச்சரித்தது. இந்தியா எச்சரிக்கை விடுத்தும், அதிகாரிகள் போதிய கவனம் தராததால் தொடர் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு