யாழ்.ஊா்காவற்றுறையில் இரு இந்தியா்கள் கைது, பெருமளவு பொருட்கள் மீட்பு, பலகோணங்களில் விசாரணை..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊா்காவற்றுறையில் இரு இந்தியா்கள் கைது, பெருமளவு பொருட்கள் மீட்பு, பலகோணங்களில் விசாரணை..

யாழ்.ஊா்காவற்றுறை- கரம்பன் பகுதியில் புடவை விற்க சென்று வீட்டி லிருந்த நகைகளை கொள்ளையடித்த இரு இந்தியா்களை ஊா்காவற்று றை பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

குறித்த இரு இந்தியா்களும் கரம்பன்- நாரந்தனை பகுதியில் புடவை வி யாபாரத்திற்காக சென்ற இந்தியா்கள் இருவா் வீட்டில் தனிமையில் இரு ந்த பெண்களின் நகைகளை அபகாித்துக் கொண்டு ஓடியுள்ளனா். 

இந்நிலையில் பாதிக்கப்பட்டசிலர் மண்டைத்தீவு பொலிஸ் காவல் அரணுக்கு பொறுப்பான உப பொலிஸ் பரிசோதகர் விவேகானந்தன் தலைமையிலான குழுவினருக்கு அறிவித்தனர்.

இதனடிப்படையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசேகரவின் ஆலோசனைக்கு அமைவாக கொள்ளையடித்த நகைகள் பொருள் களுடன் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த நபர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், வங்கி அட்டைகள், கடவுச்சீட்டுகள், கடவுள் விக்கிரகங்கள் இந்திய நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு