இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் - யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு

ஆசிரியர் - Admin
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் - யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி டெப்ளிட்ஸ் அவர்கள் (ALAINA B. TEPLITZ) நேற்று (06) யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களை சந்தித்தார். இச் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 

தூதுவர் முதலில் தற்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மக்களின் நிலைப்பாடுகள் எவ்வாறு காணப்படுகின்றது என்பது பற்றி முதல்வரிடம் வினவினார். இதற்கு பதிலளித்த முதல்வர் அவர்கள் மக்கள் பெரும் அச்சத்தோடு இருக்கின்றனர். நம்பிக்கையை இழுந்துவிட்டனர். காரணம் என்னவென்றால் இலங்கை மீதான ஐ.நா வின் 30.1 தீர்மானம் மற்றும்  34.1 தீரமானங்கள் ஊடாக மக்கள் எதிர்பார்த்திருந்த நீண்டகால அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கடந்த ஒக்கோபர் மாதம் நடைபெற்ற அரசியல் புரட்சியுடன் பாராளுமன்றில் 2ஃ3 பெரும்பாண்மை இல்லாது போனதுடன்  நம்பிக்கை இழக்கப்பட்டு விட்டது. பெரும்பாண்மை கிடைத்தால் மாத்திரமே இது சாத்தியம். எனவே மக்கள் அந்த நம்பிக்கையை இழந்து விடட்னர். 

மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும்  நூற்றுக்கணக்கான நாட்களுக்கு மேற்பட்ட போராட்டங்களுக்கு இதுவரை விடை காண முடியாத பிரச்சினையாக இருக்கின்றது. இதற்கு எவ்வாறாயினும் விடை கண்டாக ஆகவேண்டும். காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது? என்பதற்கான பதிலை உரிய தரப்பினர் முன்வைக்க வேண்டும். அதற்கான ஏற்பாடாக காலாமல் போனவர்களை கண்டறிவதற்கான ஆணைக்குழுவை உருவாக்கியிருந்தாலும், உரிய காலத்தில் ஆரம்பிக்காது காலம் தாழ்த்தியமையே பாரதூரமாக அமைந்தது. எனவே ஒவ்வொரு விடயங்களும் உரிய காலத்தில் செய்யப்படாது காலம் தாழ்த்தி மேற்கொள்ளப்படுவதே இந்த அவ நம்பிக்கைக்குரிய காரணம். எனவே காணாமல் போனவர்களுக்கான பதிலை அரசாங்கம் சொல்ல வேண்டும். அரசிற்கு பொறுப்பு உள்ளது. அதற்கான பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இவ் விடயத்தில் முழுமையாக பொறுப்புக் கூறவேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏன் என்றால் மக்கள் 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குத் தான் ஏகோபித்த உரிமையை தந்தார்கள். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப் பொறுப்பிலிருந்து விலகிச் செல்ல முடியாது என்ற கருத்தை முன்வைத்தார். முதல்வரின் கருத்தை தூதுவர் வரவேற்றார். 

அடுத்து வடக்குமாகாணசபையை பொறுப்பேற்கும் போது இருந்த நோக்கம் நிறைவேறியுள்ளதா? நோக்கங்கள் அடையப்பட்டுள்ளதா? என தூதுவர் வினவினார். அதற்கு பதிலளித்த முதல்வர் நோக்கங்களில் பல அடையப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். பாரிய அளவில் முயற்சிகளும் எட்டப்படவில்லை. ஆயினும் ஒன்றுமே நடக்கவில்லை என்று இல்லை. சில முக்கிய விடயங்களை செய்து முடித்துள்ளோம். ஆவற்றுள் ஒன்று ஜெனீவாவிற்கான பிரேரணையினை நிறைவேற்றப்பட்டது. மாகாணசபையை பொறுப்பேற்கும் போது இரண்டு விடயங்களை முன்வைத்திருந்தோம் ஒன்று போரால் பாதிக்கப்பட்ட மக்களை கொண்ட நாம் எமது உட்கட்டுமானங்கள், அபிவிருத்திகளை முன்னெடுத்தல். இரண்டாவது வாழ்க்கைத்தரம் குன்றியிருக்கின்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்ற நலிவடைந்த மக்களினுடைய வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல். இவற்றிற்குரிய பொறிமுறையை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை கண்டறிவதுதான் நோக்கமாக இருந்தது. ஆனால் அது முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. நிறைவேறவில்லை. வசதி படைத்தவர்கள் மேலும் உயர்ந்து செல்ல, வறுமைக் கோட்டிலுள்ளவர்கள் வறுமையால் கீழ் நோக்கி சென்றுகொண்டிக்கின்றார்கள். எனவே அதற்கான பொறிமுறைகள் கண்டறியப்பட்டு அவற்றை மேற்கொள்ள வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களுக்கு இருக்கின்ற வறுமை ஒழுப்பு என்று இருந்தாலும் மேற்குறிப்பிட்ட வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பர்டுகள் இல்லை. எனவே இதற்கு தீர்வு காணவேண்டியது அவசியமாகும். 

மேலும் குறைபாடுகள் தொடர்பில் முதல்வர் கூறும் பொழுது வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் இங்குள்ள இளைஞர் யுவதிகளை புலம் பெயர் தேசத்திற்கு செல்ல உத்வேகங்களை கொடுக்கின்றதே தவிர நாங்கள் அரசியல் ரீதியான உரிமையைப் மீளப்பெறுவதற்கு புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களை எமது மண்ணிற்கு கொண்டு வந்து அரசியல் ஜனநாயக உரிமையை நிலைநாட்டுவதற்கு அழைப்புவிட்டுக்கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் எங்கள் எதிர்கால சந்ததி புலம்பெயர் தேசத்திற்கு செல்ல நினைக்கிறது ஒரு ஆபத்தான நிலையாகும். முதல்வரின் இக் கருத்தினை தூதுவரும் ஏற்றுக் கொண்டதுடன், இது குறித்து சிந்திக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டார். எனவே இதற்கான ஏற்பாடுகளாக அழிவடையந்துள்ள வர்த்தக மையங்களை மீள ஆரம்பித்தல், புதிய புதிய வர்த்தகங்களை, வர்த்தக நிலையங்களை வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது என்ற கருத்தையும் முதல்வர் முன்வைத்திருந்தார். 

மேலும் மாநகர உறுப்பினர்களுக்கான பயிற்சிகள் - மேம்பாடுகள், உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி தொடர்பில் புதிய முயற்சிகள் - மேம்பாடுகள் தொடர்பிலான பயிற்சிப் பட்டறைகளுக்கான ஏற்பாடுகளை தூதுவருடைய ஏற்பாட்டில் மேற் கொள்ள முயற்சிகளை செய்து தருமாறு முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். உண்மையிலேயே இது நல்ல முயற்சி என்று இதனை ஏற்றுக் கொண்டார். இப் பயிற்சிகள் பல கட்சிகளை கொண்ட சபைகளில் எவ்வாறு முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்பதை விணைத்திறனாக மேற்கொள்ள உதவும் என்றார். 

புதிய அரசியலமைப்பு முயற்சிகள் குறித்து பேசும் போது அமெரிக்காவின் கண்காணிப்பு தொடர்ந்து கொண்;டுதான் இருப்பதாகவும், அதற்கான ஒத்துழைப்புக்கள் தொடர்ந்தும் இருக்கும் என்ற கருத்தினையும் தூதுவர் பதிவு செய்து கொண்டதுடன், ஜெனீவாவில் இம்முறை இலங்கைக்கு வழங்கப்படுகின்ற கால அவகாசத்தினால் மாத்திரமே இலங்கையின் நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து கொண்டு இலங்கையின் நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணிக்க முடியும் என்றும் இல்லாவிட்டால் ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான நிகழ்ச்சி நிரல் இல்லாது போய்விடும் என்ற கருத்தை தூதுவரே குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இக் கருத்தையே கூட்டமைப்பும் வலியுறுத்தி வருவதனை தான் அறிந்துள்ளதாகவும், அது வரவேற்க தக்கது என்றும் குறிப்பிட்டிருந்தார். 

இறுதியாக ஆட்சிமாற்றங் குறித்து தூதுவர் வினவியதற்கு பதிலளிக்கையில் 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த நிலமையைவிட 2015 பின்னர் முழுமையாக இல்லாவிடினும், ஓரளவேனும் சாத்தியமான சாதக நிலைமைகள் தோன்றியிருக்கின்றன, காணிகள் விடுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, ஆனாலும் முன்னேற்றம் போதுமான அளவு இல்லை. இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகின்றது. எனவே அரசியல் ரீதியான தீர்வுகளை நோக்கி பயணிக்கின்ற அதே நேரம் அபிவிருத்தி மற்றும் இதர தேவைகள் குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தை குறிப்பிட்டிருந்தார். 

இச் சந்திப்பில் தூதுவருடன் அமெரிக்க தூதுவராலயத்தின் பொது விவகார அலுவலர் டேவிட் ஜே மெக்குரி – (DAVID J MCGUIRE ), அமெரிக்க தூதுவராலயத்தின் அரசியல் பிரிவு தலைவர் அந்தோனி எப். ரென்சுலி ( ANTHONY F RENZULLI    ), மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு