இலங்கைக்கு கடிவாளம் போடுவது எப்படி? - ஆராயவுள்ள கூட்டமைப்பு.

ஆசிரியர் - Admin
இலங்கைக்கு கடிவாளம் போடுவது எப்படி? - ஆராயவுள்ள கூட்டமைப்பு.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தி­லி­ருந்து இலங்கை அரசு வெளி­யே­றாத வகை­யில், அதன் வாக்­கு­று­தி­களை குறு­கிய காலத்­துக்­குள் நிறை­வேற்­றக் கூடி­ய­தாகத் தீர்­மா­னம் எப்­படி அமை­ய­வேண்­டும் என்­பது பற்றி நாங்­கள் ஆராய இருக்­கின்­றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.

'இலங்கை தொடர்­பில் கடந்த காலங்­க­ளில் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன. அவற்றை உரிய வகை­யில் இலங்கை அரசு நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை. இலங்­கைக்கு 2017ஆம் ஆண்டு 2 ஆண்­டு­கள் கால அவ­கா­சம் வழங்­கப்­பட்­டது. 

அது எங்­க­ளின் தீர்­மா­னம் அல்ல. மனித உரி­மை­கள் சபை­யில் அங்­கம் வகிக்­கும் உறுப்பு நாடு­க­ளின் தீர்­மா­னம். அவ்­வாறு வழங்­கப்­பட்ட கால அவ­கா­சம் முடி­வ­டை­கின்­றது. இந்த நிலை­யில் பிரிட்­டன் மேலும் 2 ஆண்­டு­கள் கால அவ­கா­சம் வழங்கித் தீர்­மான வரைபை முன்­வைத்­துள்­ளது. அந்­தத் தீர்­மா­னம் தொடர்­பில் நாங்­கள் மகிழ்­ச்சி­ய­டை­ய­வில்லை. தமிழ் மக்­க­ளுக்கு ஏமாற்­ற­மா­கவே அமைந்­துள்­ளது.

இலங்கை அரசு ஒரு பக்­கம், ஐ.நா.தீர்­மா­னத்­தி­லி­ருந்து வெளி­யேற நினைக்­கின்­றது. அத­னை­யும் அனு­ம­திக்க முடி­யாது. காலஅவ­கா­ச­மும் வழங்க முடி­யாது. இலங்கை அர­சுக்கு கால அவ­கா­சம் வழங்­கா­மல், தீர்­மா­னங்­களை எப்­படி நிறை­வேற்ற முடி­யும் என்­பது தொடர்­பில், எங்­கள் தொடர்­பான தீர்­மா­னம் எப்­படி அமை­ய­வேண்­டும் என்­பது தொடர்­பில், நாங்­கள் ஆராய இருக்­கின்­றோம் என்­றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு