நடமாடும் சேவையில் பல மக்கள் பயன்பெற்றனர். அமைச்சர் சம்பிக்க, முதல்வர் ஆனல்ட், எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்பு.

ஆசிரியர் - Admin
நடமாடும் சேவையில் பல மக்கள் பயன்பெற்றனர். அமைச்சர் சம்பிக்க, முதல்வர் ஆனல்ட், எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்பு.

நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட நடமாடும் சேவை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மாநகர மற்றும் மேல்மாகாண அமைச்சர் கௌரவ பாட்டாலீ சம்பிக்க ரணவக்க அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த (21) நடைபெற்றது.   

இந் நடமாடும் சேவையில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் - பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சருடன் இணைந்து தீர்வுகாணும் முயற்சியிலும் ஈடுபட்டார். 

இந் நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், யாழ் பிரதேச செயலர் பொ.தயானந்தன், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் யாழ் பிராந்திய பணிப்பாளர், திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர். 

இந் நடமாடும் சேவையில் யாழ் மாவட்ட பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண திணைக்களங்கள் மற்றும் மத்தியரசின் திணைக்களங்கள் ஆகியவை பங்குபற்றியதுடன், பொது மக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு