நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வில் மாநகர முதல்வரும் பங்கேற்பு

ஆசிரியர் - Admin
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வில் மாநகர முதல்வரும் பங்கேற்பு

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அமைச்சர்; கௌரவ பாட்டாலி சம்பிக்க றணவக்க அவர்களின் தலைமையில் இன்று (21) கட்டடத்தின் கட்டமைப்பை பிரதிபலிக்கும் திட்டத்தின் திரை நீக்கத்துடன் ஆரம்பமானது. 

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வரும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் அடிக்கல்லையும் நாட்டிவைத்தார். மதத்தலைவர்களின் ஆசியோடு இடம்பெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள், வடமாகாண ஆளுநர் அவர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு